ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு


375089_596760353675552_1228612807_n

ஆயுள் வரை வேண்டும்

என் அம்மாவின் அன்பு..

அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம்.

அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம்.

கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.

அவள் கட்டிய முந்தானை கந்தலாயினும் கூட, அதில் கண்ட வாசனை சுகத்தை இன்னும் பெற இயலவில்லை பிறர் எவரிடமும்.

வெட்டிய மூங்கிலில் பற்றிய தீ போல அவள் விழிகள்.

சொட்டிய கண்ணீரையும் இம்மண்ணிற்க்குத் தராமல்,

என் முந்தானைக்கே சொந்தம் என்று தந்து விட்டுப் போகிறாள்.

வீதி வழி நடந்த பாதை,

பாதை வழி மறந்த பேதை,

என்னென்று அறியாது ஏதென்று புரியாது,

தன் கன்றான என்னைப் பற்றிக் கொண்டு போகும் போது

கண்ணீர் விடவும் தெரியாது நின்றேன்.

அம்மா அழுகையின் காரணம் அறியாது தவித்தேன்.

ஒரு நாள் அவள் வேலையில் தடை செய்து நான் விளையாடிய போது,

தடி கொண்டு என்னை அடித்து விட்டு தானும் அழுதாள்.

நானும் அழுதேன்.

அவள் அடித்த வலியை எண்ணி அல்ல.

அடம் பிடித்த என்னால் தானே அம்மா அழுகிறாள் என்று.

வட்ட வடிவ புட்டு வேண்டும் என்று நான் அழுத போது-அப்படியே

விட்டு விட மனமின்றி, ஏதுமில்லாத போதிலும் துருவிய தேங்காயில் நீ சுட்ட புட்டின் சுவை தாண்டி இன்னும் செல்லவில்லை என் நாக்கின் சுவை அரும்புகள்.

என்னைக் கொட்டிய தேளை

வெட்டி எறிந்தாயே அம்மா..

உனையன்றி யாரும் என் உயிர் தாங்க முடியாது..

நீயின்றி நானோ உயிர் வாழ இயலாது..

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

-இப்படிக்கு

தமிழ்இளவரசி.

 

 

 

3 Comments Add yours

  1. Kannan சொல்கிறார்:

    Beautiful!!

    Liked by 1 person

    1. tamilelavarasi சொல்கிறார்:

      Thank You my Friend..

      Like

பின்னூட்டமொன்றை இடுக