பச்சை நிற சேலை கட்டி
படுத்திருக்கும் பாவை அவள்.
உச்சி மலை ஓரத்திலே
குடியிருக்கும் குமரி அவள்.
தொட்டில் கட்டி சீராட்டி
தாலாட்டும் தாய் நிலம்.
பூமியெங்கும் படர்ந்திருக்கும்
பச்சை நிற வானம்.
தொலை தூரம் தொட்ட தென்றல்,
அலை அலையாய் பாய்கிறது,
அழகிய நாற்றின் நடனத்திலே..
spr spr!!!!!!
LikeLiked by 1 person
Thank u Bro..
LikeLiked by 1 person
அருமை திறமை எனக்கும் கவி படைக்க அவா ஆனால் அழகு அறிவு கவிக்கேது என்பதால் துறவு போய்விட்டேன் என் வாழ்வு பிறர் தோண்ட கிடைத்தாலும் கிட்டாது என் தாகம் என்று….. என்றுமே யாருக்கும் உணர உலகியலில் உங்களை போல இயற்கையை ரசிக்க மனமில்லை வாழ்த்துக் கள் தங்கள் எழுத்துக்களுக்கும் இயற்கைக்கும் கோடி கோடி என்றென்றும் வாழ்த்துக்கள்…..
LikeLiked by 1 person
மிக்க நன்றி தோழரே.. துறவு போயினும் தமிழின் தொன்மை மறவா உள்ளம் கொண்ட உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்..
LikeLike